ரயில்களில் ஏசி பொருளாதாரப் பெட்டிகள் (3-இ) விரைவில் நீக்கம்: ரயில்வேத்துறை!

ரயில்வேத்துறை
ரயில்வேத்துறை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

 நீண்ட தூர ரயில் பயணங்களின்போது, படுக்கை வசதியுடன் கூடிய 3 அடுக்கு ஏசி பெட்டிகளில் அதிகளவு பயணிகள் செல்வது வழக்கம். இப்போது இந்த பொருளாதார வகுப்பு (3- இ) பெட்டிகளை நீக்க, ரயில்வே முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

 நீண்ட தூர ரயிலில் பயணிகள் மலிவு விலையில் பயணம் செய்ய வசதி அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏசி பொருளாதார பெட்டிகள்(3- இ) அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ரயில் கட்டணங்கள் 6 முதல் 8 சதவீதம் வரையில் குறைவாக வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஏசி 3- இ பெட்டிகளை ரத்து செய்ய ரயில்வே முடிவு எடுத்துள்ளது.

 இதுகுறித்து ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது;

 ரயில்களில் ஏசி 3- இ வகுப்புகளை நீக்கிவிட்டு, அவை ஏசி 3 அடுக்கு வகுப்புகளுடன் இணைக்கப்படும். இந்த பணி 4 மாதங்களில் முடிக்கப்படும். தற்போது 463 ரயில்களில் ஏசி 3- இ பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மற்றபடி 11,277 ரயில்களில் ஏசி 3-ம் வகுப்பு பெட்டிகள் உள்ளன என்று தெரிவித்தனர்.

logo
Kalki Online
kalkionline.com