தெய்வச் செயல்! 58 வயதுப் பெண்ணுக்கு பொருந்திப் போன 14 மாதக் குழந்தையின் சிறுநீரகம்!

தெய்வச் செயல்! 58 வயதுப் பெண்ணுக்கு பொருந்திப் போன 14 மாதக் குழந்தையின் சிறுநீரகம்!
கார்த்திகா வாசுதேவன்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ஹைதராபாத்தில் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சைமுறையில் நிவாரணம் பெற்று வந்த 58 வயது பெண்ணுக்கு பிறந்து 14 (1 வயது 2 மாதங்கள்) மாதங்களே ஆன மூளைச்சாவு அடைந்த குழந்தையின் சிறுநீரகம் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவுற்றிருக்கிறது.

குழந்தையின் பெற்றோர் இறந்த குழந்தையின் சிறுநீரகத்தை மிகுந்த மனோதைரியம் மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் தானமாக அளிக்க முன்வந்தது பாராட்டுதலுக்குரியது. ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் இந்த அரிய உயிர்காக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. வயதான ஒருவருக்கு மிகச்சிறிய குழந்தையின் சிறுநீரகத்தை பொருத்தும் சவால்களை முறியடித்து குழந்தையிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீரகம் முதியவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டதாகத் தகவல்.

சிக்கலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த குழுவை வழிநடத்திய சிறுநீரக மருத்துவர் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் உமாமகேஸ்வர ராவ் கூறியதாவது; " “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பொருத்தமான உறுப்புகள் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில், நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற பலவிதமான அறுவை சிகிச்சைகளைச் செய்வது மிகவும் முக்கியமானது.

இந்த அறுவை சிகிச்சை வயது மற்றும் அளவு போன்ற எல்லைகளை தாண்டியது. மனித சிறுநீரகம் மூன்று வயது வரை தொடர்ந்து வளர்ந்து வளர்ச்சியடைந்து, அதன் பிறகு அதன் முழு அளவு மற்றும் செயல்பாட்டை அடைகிறது. மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகும், சிறுநீரகம் பெறுபவரின் உடலில் தொடர்ந்து வளர்கிறது, ”என்று அவர் கூறினார். இந்த அற்புதமான செயல்முறை மருத்துவ அறிவியலின் குறிப்பிடத்தக்க திறன்களை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் தன்னலமற்ற உறுப்பு தானத்தின் ஆழமான தாக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது,” என டாக்டர் உமாமகேஸ்வர ராவ் குறிப்பிட்டார்.

logo
Kalki Online
kalkionline.com