கடுமையான காய்ச்சலோடு மருத்துவமனையில் குஷ்பு!

கடுமையான காய்ச்சலோடு மருத்துவமனையில் குஷ்பு!

தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கடுமையான காய்ச்சலால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ஐதராபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் சென்ற குஷ்பு, சென்ற இரு தினங்களாக கடுமையான காய்ச்சலால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.

சாதாரண காய்ச்சலாகத்தான் இருக்கும் என அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவரது உடல்நிலை நேற்று இரவு மிகவும் மோசமாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உதவியாளர் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் குஷ்புவுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலியால் அவதிப்படும் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். எனது உடல் நிலை மிகவும் பலவீனம் அடைந்து வருகிறது. இதனால் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இங்கு எனக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடலில் ஏற்படும் சிறு சிறு அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உன்னிப்பாக கவனியுங்கள். கவனிக்காமல் விட்டதால்தான் நான் தற்போது மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறேன். விரைவில் நான் குணமடைவேன் என நம்புகிறேன். ஆனால், அதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன்’ எனப் பதிவிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com