தாராவியை மறுசீரமைக்க அதானி குழுமம் ஒப்பந்தம்!

தாராவி பகுதி
தாராவி பகுதி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய தாராவி பகுதியை மறுசீரமைக்கும் திட்டத்தை அதானி குழுமம் ரூ.5,069 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

மும்பையில் கீழ்த்தட்டு மக்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியாக தாராவி விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியாக மும்பையின் தாராவி கருதப்படுகிறது. இங்கு சுமார் 12 ஆயிரம் சிறுகுறு நிறுவனங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் 300 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள தாராவி குடிசை பகுதியில் சுமார் 10 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ள தாராவியை மறுசீரமைக்க மகாரஷ்டிர அரசு கடந்த 15 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபரில் மகாராஷ்டிர  அரசு இதற்கான ஏலம் அறிவிப்பு செய்தது.

இந்த ஏலத்தில் பங்கேற்க இந்தியா, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு சேர்ந்த 8 நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ஆனால் இறுதியில் அதானி குழுமம், டிஎல்எப் மற்றும் நமன் குரூப் நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றன. அதில் அதானி குழுமம் ரூ. 5069 கோடிக்கு ஏலத்தொகைக்கு வெற்றிபெற்று, மும்பையை மறுசீரமைக்கும் ஒப்பந்த பணியை பெற்றுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com