‘அதிமுக கட்சியா அல்லது கிளப்பா?’ வழக்கறிஞர் சரமாரி கேள்வி!

‘அதிமுக கட்சியா அல்லது கிளப்பா?’ வழக்கறிஞர் சரமாரி கேள்வி!

திமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மாறி மாறி வழக்கும் மேல்முறையீடும் தொடுக்கப்பட்டன. இவற்றில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பே வாதமே மேலோங்கி இருந்தது. ஏறக்குறைய அதிமுக தங்கள் தரப்புக்கே சொந்தம் எனும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததோடு, தனது மனுத்தாக்கலையும் செய்தார். இவர் தவிர அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் முறையீடு செய்தனர். இந்த முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம்; ஆனால், முடிவுகளை மட்டும் அறிவிக்கத் தடை விதிப்பதாக தெரிவித்தது. அத்துடன் வரும் ஏப்ரல் 11ந் தேதி ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு தீர்மான வழக்கு விசாரணை மார்ச் 22ந் தேதி முதல் நடைபெறும் எனவும், மார்ச் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறி இருந்தது. அதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ்-ம் வழக்கு தொடர்ந்தார்.

அதன் அடிப்படையில் இன்று காலை அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ‘அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ளவரை அடிபடை உறுப்பினராக இருப்பவரை நீக்குவது போல் நீக்கியது எப்படி சரியாகும்? 1977ம் ஆண்டு முதல் கட்சியில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரிடம் விளக்கம் கேட்காமல் அவரை எப்படி கட்சியில் இருந்து நீக்கலாம்? உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்கிறது இபிஎஸ் தரப்பு. அப்படி எனில் இபிஎஸ் தரப்பு நடத்துவது கட்சி இல்லையெனில் கிளப்பா அல்லது சங்கமா? என சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com