பாஜக-வில் இணைந்தார் அமரீந்தர் சிங்!

பாஜக-வில் இணைந்தார் அமரீந்தர் சிங்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாஜகவில் இணைந்தார். அவரது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவோடு இணைத்தார்.

அமரீந்ஹர் சிங் பஞ்சாப் மாநில முதல்வராகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் கட்சியில் இருந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இவருக்கும் தொடர்ச்சியாக மோதல் போக்கே நீடித்து வந்தது. இதனை அடுத்து பஞ்சாப் மாநில காங்கிரஸின் தலைவராக சித்துவை நியமித்த பின் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தனது பதவிக்காலம் முடியும் முன்பே அதில் இருந்து ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகிய அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியை தொடங்கினார். இந்த புதிய கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தார். ஆனால் அமரீந்தர் உட்பட அவரது கட்சியினர் அனைவரும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியுற்றனர். இதனை தொடர்ந்து தனது கட்சியுடன் பாஜகவில் இணைந்து விடுவார் என சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் அமரீந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்.

logo
Kalki Online
kalkionline.com