

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் புகைச்சல் நிலவி வருவது அனைவரும் அறிந்தது தான். பாமக அதிகாரப்பூர்வமாக அன்புமணி தலைமையில் செயல்பட்டு , சட்டமன்றத் தேர்தலில் மாம்பழ சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. அதே நேரம் ராமதாஸ் தரப்பு , அய்யா பாமக என்ற பெயரில் தனித்து இயங்கி வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் திருமதி.சசிகலா உடன் இணைந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்துள்ளது.
அன்புமணி – ராமதாஸ் பிரிந்தாலும் , தேர்தல் களத்தில் பாமகவினர் ராமதாஸின் பெயரையும், படங்களையும் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்னர், ராமதாஸ் தரப்பில் இருந்து , அன்புமணி தனது படங்களை பயன்படுத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இன்று மாலை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் , நீதிபதி ராமதாஸ் புகைப்படங்களை அன்புமணி தரப்பில் பயன்படுத்துவதற்கு தடைவிதித்தார். வழக்கின் அடுத்த கட்டம் விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.