கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் 500 மதுக்கடைகள் மூடும் அறிவிப்பு!?

கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் 500 மதுக்கடைகள் மூடும் அறிவிப்பு!?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு  பிறந்த நாள் விழா வரும் ஜூன் மாதம் 3ம் தேதி அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக் கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே  டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே இருந்த அதிமுக அரசும் சரி, தற்போது இருக்கும் திமுக அரசும் சரி, மதுக்கடைகள் மூடப்படும் என்று கூறுகின்றனவே ஒழிய, ஒரு கடையும் மூடப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, புதுப்புது வடிவத்தில் பொதுமக்களின் கரங்களில் சுலபமாக மது பாட்டில்கள் கிடைக்க வழிவழி செய்துதான் வருகின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் தமிழக திமுக அரசு முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் இயங்கிவரும் 5,289 டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளையெட்டி  வரும் ஜூன் மாதம் 3ம் தேதி தமிழக அரசு வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதற்காக மூடுவிழா செய்யப்பட உள்ள 500 டாஸ்மாக் மதுக்கடைகளை அடையாளம் காணும் பணி நிறைவடைந்து இருப்பதாகவும், விரைவில் அந்த மதுக்கடைகளை மூடுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com