மதுரை அரிட்டாபட்டி பல்லுயிர் மண்டலமாக அறிவிப்பு!

மதுரை
மதுரை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழகத்தில் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை  பல்லுயிர் பாரம்பரிய மண்டலமாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அரிட்டாப்பட்டி கிராமத்தில் 7 சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதி அமைந்துள்ளது. இதில்  72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள், 3 தடுப்பணைகள் உள்ளது. மேலும் இப்பகுதி பல பறவைகள் மற்றும் அரிய வகை தேவாங்கு ஆகிய வனவிலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளன.

மேலும் பல்வேறு சமண சிற்பங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் ஆகியவையும் உள்ளன.

இதனால் தமிழக அரசு அரிட்டாப்பட்டியை பல்லுயிர்ப் பாரம்பரிய தலமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இப்பகுதியின் வளமான உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தைப் பாதுகாக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com