நடிகை ஜெயப்பிரதாவுக்கு பிடி வாரண்ட்!

ஜெயப்பிரதா
ஜெயப்பிரதா
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. ஜெயப்பிரதாவை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அந்த தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயபிரதா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர்மீது அம்மாநிலத்தின்  2 காவல்  நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை உத்தர பிரதேசத்தில் எம்.பி, மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் ஜெயப்பிரதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து ஜெயபிரதாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

logo
Kalki Online
kalkionline.com