வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு.. அதிர்ச்சியில் பயணிகள்!

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு.. அதிர்ச்சியில் பயணிகள்!

ந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

சமீபத்தில், ஹிமான்ஷூ முகர்ஜி என்ற பயணி தன் சமூக வலைதள பக்கத்தில், வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு பற்றி புகார் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உணவில் கிடந்த வண்டை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவ, தகவல் அறிந்த இந்திய ரயில்வே, இந்த தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் இனிமேல் உணவு தயாரிப்பின்போது கவனமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com