மேற்கு வங்காளத்தில் கலவரத்தில் முடிந்த பாஜக பேரணி

மேற்கு வங்காளத்தில் கலவரத்தில் முடிந்த பாஜக பேரணி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on


மேற்குவங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சில திரிணாமுல் கட்சி தலைவர்கள் விசாரிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல் முன்னெடுப்புகளை செய்து வருகிறது பாஜக.

அதனை தொடர்ந்து நேற்று கொல்கத்தாவில் "நபன்னா அபிஜன்" என்கிற ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பேரணியை நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது.

இதற்காக மேற்குவங்கத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் தொண்டர்கள் வருவதற்காக ஏழு இரயில்களை வாடகைக்கு எடுத்திருந்தது பாஜக.

இந்த நிலையில் பேரணியின் போது காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கலவரம் வெடித்திருக்கிறது. இதில் இருதரப்பினருமே காயமடைந்திருப்பதாக தகவல்கள் வருகிறது.

காவல்துறை வாகனங்கள் சில தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் , தண்ணீரை பீய்ச்சியடித்தும் வருகிறது. மேற்குவங்க காவல்துறை கலவரத்தை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com