சென்னை புத்தக கண்காட்சி விரைவில் .....!

book fair
book fair

ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழா வரும் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. வரப்போகிற 2023 ஆம் ஆண்டுக்கான புத்தக காட்சியை கடந்த ஜனவரி 6-ம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக காட்சியாக சென்னை புத்தக காட்சி கருதப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

book fair
book fair

புத்தக காட்சியில் நாள்தோறும் பல்வேறு அறிஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் . வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வாசகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்

வார நாட்களில் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக காட்சி நடைபெறறும் . விடுமுறை தினங்களில்

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக காட்சி நடைபெறும் . புத்தக கண்காட்சியில் மாணவ மாணவியருக்கு முற்றிலும் இலவசம். மற்றவர்களுக்கு RS. 10/- நுழைவு கட்டணம் உண்டு.

புத்தக கண்காட்சியினை திறந்து வைக்க முதல்வன் முக ஸ்டாலின் அவர்களால் தேதி உறுதி செய்யப்பட்டு திறப்பு விழா தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com