உத்திரப்பிரதேச மாநிலம், சரையா கிராமத்தில் பாழடைந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலத்தின் மேல் அமர்ந்திருந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிராம மக்களின் தீவிர நடவடிக்கையால் கால்வாயில் விழுந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளர்.