

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளார்.
* பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கோழி வளர்ப்பை ஊக்குவிக்கவும் நடவடிக்கை
* விவசாயிகளின் நிலம், சாகுபடி உள்ளிட்டவற்றின் விவரங்களை ஒருங்கிணைக்க பாரத் விஸ்தார் ஏ.ஐ. செயலி.
* மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விகிதத்தில் மாற்றம் இல்லை. 41 சதவீத அளவிலேயே தொடரும்.
* வரும் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும்.
* விபத்து காப்பீட்டு தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு.
* மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு SHE MART என்ற பெயரில் கடைகள் அமைக்கப்படும்.
* முந்திரி உற்பத்தியை மேம்படுத்த பிரத்யேக இயக்கம் முன்னெடுக்கப்படும்.
* சந்தன மரங்கள் சாகுபடிக்கு மாநில அரசுகளுடன் சேர்ந்து திட்டம் உருவாக்கப்படும்.
* வெளிவாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக அதிகரிப்பு
* மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
* பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலா வழித்தடம் அமைக்கப்படும்.
* நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் மாநிலங்களுக்கு படி ரூ.1.40 லட்சம் கோடி விடுவிப்பு
* வரும் ஆண்டுகளில் 1.5 லட்சம் சுகாதாரப் பணியாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
* மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த தனியார் துறைகளோடு இணைந்து நாடு முழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்.
* நாட்டின் 3 இடங்களில் சர்வதேச தரத்தில் ஆயுர்வேத சிகிச்சை மையம் நிறுவப்படும்.
* மருத்துவ சிகிச்சைகளுடன், நோய் கண்டறிதல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படும்.
* நாள்பட்ட நோயாளிகளுக்கு உதவிபுரிய 1.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
* மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
* மருத்துவ சுற்றுலாவை மேம்படுதத நாடுமுழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்.
* ஏஐ, குவாண்டம் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளில் அறிமுகப்படுதத ஒருங்கிணைந்த திட்டங்கள் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாச்சார செழுமையை விளக்கும் வகையில் மையம் அமைக்கப்படும்.
* ஆதிச்சநல்லூரில் உள்பட 15 இடங்களில் உள்ள தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும்.
* ஆயுஸ் மருந்தகங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
* பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
* புலிகட் ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.
* 2026-27 ஆம் நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு
* நாடு முழுவதும் கால்நடை மருத்துவ கல்லூரிகளுக்கு மூலதன மானியம் வழங்கப்படும்.
* 500 நீர்நிலைகளில் மீன்பிடி தொழில், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* கார்பன் உமிழ்வை குறைக்க 4 துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு.