

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகின்ற அக்டோபர் 6-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.
திமுக சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. இதன்படி மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சௌமியாவும் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் இன்று காலை தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல், இம்முறை தவெக சார்பில் களமிறங்குகிறார். அதோபோல் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, இம்முறை தவெக சார்பில் களமிறங்குகிறார்.
திமுக மற்றும் தவெக வேட்பாளர்களை அறிவித்த நிலையில் இரண்டு தொகுதிகளிலும் செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை நிறுத்த அதிமுக திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத் மற்றும் தாராபுரத்தில் பானுமதி போட்டியிட உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.