கனடாவின் செயலுக்கு கனடா தூதர் கேமரன் மெக்கே கடும் கண்டனம்!

கனடாவின் செயலுக்கு  கனடா தூதர் கேமரன் மெக்கே கடும்  கண்டனம்!
Published on

கனடாவின் பிராம்ப்டன் நகரில் நடந்த கண்காட்சியின் அணிவகுப்பு ஒன்றில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொலை செய்யப்படுவது போன்ற சிலைகள் வடிவமைக்கப்பட்டு, காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வேகமாக பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜ.க அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. இதில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை கனடாவில் கொண்டாடிய விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய ஜெய்சங்கர், இதில் பெரிய விவகாரம் தொடர்பில் இருக்கும் என நான் நினைக்கிறேன். யார் வேண்டுமென்றாலும் செய்யக்கூடிய, வாக்கு வங்கி அரசியலுக்கான தேவையை கடந்து, நாம் புரிந்துகொள்ள தவறிய விஷயம் என்னவென்றால், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ள ஒரு பெரிய விவகாரம் இதில் மறைந்துள்ளது. இது உறவுகளுக்கு நல்லதல்ல என நான் நினைக்கிறேன். கனடாவுக்கும் நல்லதல்ல. கனடாவில் நடந்த ஏதோ ஒரு விஷயம் என்றில்லாமல், அதிர்ச்சி தரக்கூடிய ஒன்று என தெரிவித்துள்ளார்.

இந்தக் கண்காட்சியில் படுகொலையை ஆதரிப்பது போன்று அணி வகுப்பு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் ரத்த காயங்களுடன் இந்திரா காந்தியின் சிலை வீடியோவில் காட்டப்பட்டுள்ளது பலரது கண்டனத்தை பெற்று வருகிறது.

கனடாவின் இந்த செயலுக்கு இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரன் மெக்கேவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "இந்தியாவின் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை கொண்டாடுவது போன்ற நிகழ்ச்சி கனடாவில் நடந்துள்ளது என்ற தகவல் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. வெறுப்புணர்வுக்கோ அல்லது வன்முறையை கொண்டாடுவதற்கோ கனடாவில் எந்த இடமும் இல்லை. இந்த செயல்களை நான் உறுதியாக கண்டிக்கிறேன்" என்று டுவிட்டரில் மெக்கே தெரிவித்து உள்ளார்.

ஆனால் கனடாவில் நடந்த அணிவகுப்பு வீடியோ பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இன்னமும் தெரிய வரவில்லை.

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com