போக்குவரத்து விதிகளை பின்பற்றாத வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு!

போக்குவரத்து விதிகளை பின்பற்றாத வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு!

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தும் வாகன ஓட்டிகள் தவறான வழியில் வகையில், போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் விபத்துகளை தடுக்க முடியும். எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என போலீசார் தன்னார்வலர்களுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமலும், செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 3 கோடிக்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் பதிவெண் பலகையில் எழுத்து மற்றும் எண்கள் இடம் பெறுவதற்கான விதிமுறைகள், மோட்டார் வாகனச் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதனை மீறினால் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது . “வாகன பதிவெண் பலகை விதிமீறல் உள்ளிட்ட மோட்டார் வாகன விதிமீறல் குறித்து மாதந்தோறும் சோதனை நடத்தப்படுகிறது. அவ்வப்போது திடீர் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டிகள் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது கவனிக்கப்பட்டது. இதன் காரணமாக விதி மீறல்களை கட்டுப்படுத்த பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு வாகன தணிக்கை சென்னையில் நடத்தப்பட்டது.

இந்த தணிக்கையில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 763 வழக்குகளுக்கு ரூ.3,81,500 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக அனைத்து வாகன ஓட்டிகளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com