விமானப் பயணிகளுக்கு 'டிஜி யாத்ரா' செயலி: மத்திய அரசு அறிமுகம்!

விமானப் பயணிகள்
விமானப் பயணிகள்
Updated on

விமானப் பயணிகளுக்கான 'டிஜி யாத்ரா' செயலியை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகப் படுத்தினார்.

விமானத்தில் பயணம் செய்வோருக்கு அப்பயணத்தை எளிதாக்கும் வகையில் மத்திய அரசால் 'டிஜி யாத்ரா' என்ற செயலி அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.  இந்த செயலி மூலம் பயணிகளை அடையாளம் கொண்டு அனுமதிக்க வழிவகை செய்யப்படுகிறது.

இத்திட்டத்தை நேற்று டெல்லி விமான நிலையத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தினார். மேலும் பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களிலும் விரைவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

விமான நிலையங்களில் காகித பயன்பாட்டை குறைக்கவும் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com