

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநராக இருந்த சாய் குமார் நியமனம்; முருகானந்தத்திற்குப் பதிலாக சாய் குமார் நியமனம்.
தமிழ்நாடு ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் மாற்றம் செய்யப்பட்ட, புதிய லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே,தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார்.