தி. மு. க எம்.பி ஆ.ராசா மீது குற்றப்பத்திரிக்கை!

ஆ.ராசா
ஆ.ராசா

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய தி. மு. க. வின் எம் பி.,யுமான ஆ.ராசா , 2015ல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராக, சென்னை சி. பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

ஆ.ராசா
ஆ.ராசா

தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.,யுமான ஆ.ராசா , 1999 அக்., முதல் 2010 செப்., வரையிலான காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக, 27.92 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்துள்ளதாக, 2015ல் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.

அதனடிப்படையில்,சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், ராசா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com