ITC SUNFEAST
ITC SUNFEAST

ஒரு பிஸ்கேடிற்கு ஒரு லட்சம் இழப்பீடு:ITC நிறுவனத்துக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

சென்னை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பிஸ்கேட் பாக்கெட்டில் 16 பிஸ்கேட்டுகளுக்கு பதில் 15 பிஸ்கேட்டுக்கள் மட்டுமே இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

சென்னையை சேர்ந்த டில்லிபாபு எனும் வாடிக்கையாளர் கடந்த 2021ம் ஆண்டு மணாலிக்கு சுற்றுலா சென்றபோது, அங்கு ITC-யின் தயாரிப்புகளுள் ஒன்றான சன் ஃபீஸ்ட் மாரி லைட் பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வாங்கியிருக்கிறார்.16 பிஸ்கட்டுகளைக் கொண்டிருக்க வேண்டிய அந்த பாக்கெட்டில், ஒரே ஒரு பிஸ்கட் குறைவாக, 15 பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்திருக்கிறது.

இது குறித்து, தான் பிஸ்கட் வாங்கிய கடைக்காரரிடமும், ITC நிறுவனத்திடமும் கேள்வியெழுப்பி எந்தவொரு பதிலும் கிடைக்காத நிலையில், சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். இது தொடர்பாக டில்லிபாபு தொடர்ந்த வழக்கில் ITC-யின் தயாரிப்புகளுள் ஒன்றான சன் ஃபீஸ்ட் மாரி லைட் பிஸ்கட் பாக்கெட்டில் 16 பிஸ்கட்டுகளைக் கொண்டிருக்க வேண்டிய அந்த பாக்கெட்டில், ஒரே ஒரு பிஸ்கட் குறைவாக, 15 பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்தது.

75 பைச என்ற விலையில் ஒரு பிஸ்கட்டைத் தயாரிக்கும் ITC நிறுவனம், ஒரு நாளில் 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளைத் தயாரிக்கிறது. ஒரு பாக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைவு என்றால், ஒரு நாளில் தயாரிக்கப்படும் பிஸ்கட் பாக்கெட்டுகள் மூலம் மட்டும் ரூ.29 லட்சம் வாடிக்கையாளர்களிடம் ITC மோசடி செய்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார் அவர். இது குறித்து ITC பதிலளிக்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் ITC-க்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனைத்தொடர்ந்து,கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ITC நிறுவனம், தாங்கள் எடையின் அடிப்படையிலேயே பிஸ்கட் பாக்கெட்டுகளை தயாரிப்பதாவும், எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல எனவும் தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பிஸ்கட் பாக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் 76 கிராம்கள் என்ற எடையை விட 74 கிராம்களே எடை கொண்டிருந்திருக்கிறன பிஸ்கட்டுகள்.குறிப்பிட்டிருக்கும் எடையை விட 2 கிராம் எடை குறைவாக பிஸ்கட் பாக்கெட்டை விற்பனை செய்ததன் காரணமாக, முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் குறிப்பிட்ட பேட்ச் பிஸ்கட்டின் விற்பனையை நிறுத்த சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தவிட்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கைத் தொடர்ந்த தில்லிபாபுவிற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் ITC-க்கு உத்தரவிட்டிருக்கிறது நுகர்வோர் நீதிமன்றம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com