வலுவடைந்த மிதிலி புயல்.. நாளை கரையை கடக்கும்..!

வலுவடைந்த மிதிலி புயல்.. நாளை கரையை கடக்கும்..!

ங்கக் கடலில் கடந்த 14ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மிதிலி' புயலாக வலுப்பெற்றிருப்பதாகவும், நாளை அதிகாலை வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மிதிலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. மிதிலி புயல் தற்போது ஒடிசாவின் பாரதீப்பிற்கு கிழக்கே 190 கிமீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திகாவிலிருந்து தென்கிழக்கே 200 கிமீ தொலைவிலும், வங்கதேசத்தின் கெபுபாராவிலிருந்து தென்மேற்கே 220 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த நிலையில், நாளை 18ஆம் தேதி அதிகாலை வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் வடமேற்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வங்கதேச கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஒடிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு கடலோர மாவட்டங்களில், புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் முன்னெச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com