கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம்: கோவையின் கிரிக்கெட் ரசிகர்களே, தயாராகுங்கள்!

Concept illustration showing Coimbatore international cricket stadium at night
Coimbatore’s new international cricket stadium – concept image
Published on

லண்டன், மெல்போர்ன், சிட்னி என உலக அரங்கில் இருக்கும் பிரம்மாண்ட மைதானங்களின் வரிசையில், இனி நம் கோவையின் பெயரும் சேரப் போகிறது!

₹500 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான பிரமாண்டமான டெண்டர்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இது வெறும் கட்டுமானச் செய்தி அல்ல, கோவையில் ஐ.பி.எல். மற்றும் சர்வதேசப் போட்டிகள் நடக்கப் போகிறது என்பதன் முதல் சத்தம்!

எப்போது வேலை ஆரம்பிக்கும்? – உறுதியான அறிவிப்பு!

டி.ஐ.டி.சி.ஓ (TIDCO) நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி அவர்களின் தகவல்படி, டெண்டர் பணிகள் நிறைவடைந்தவுடன், மைதானத்தின் கட்டுமான வேலைகள் டிசம்பர் 2025 இறுதிக்குள் அல்லது 2026 ஜனவரி தொடக்கத்திலேயே சூடு பிடிக்கத் தொடங்கும்!

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பராமரிக்கும் ஒப்பந்தத்துடன், ஒரு உலகத் தரமான மைதானம் நம் மண்ணில் எழவிருக்கிறது!

குறிப்பு: இந்த டெண்டரில் பங்கேற்பதற்கான கடைசி நாள் நவம்பர் 24 ஆகும்.

Optus ஸ்டேடியம் ஸ்டைலில் நம்ம கோவை மைதானம்!

மைதானத்தின் வடிவமைப்பு சாதாரணமானது அல்ல! ஆஸ்திரேலியாவில் உள்ள, உலகின் மிகச் சிறந்த பன்முகப் பயன்பாட்டு மைதானமான Optus Stadium (ஆப்டஸ் ஸ்டேடியம்) பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மைதானத்தின் ஹைலைட்ஸ்:

  • பிரம்மாண்ட கொள்ளளவு: ஒரே நேரத்தில் 25,000 முதல் 30,000 ரசிகர்கள் அமரும் வசதி!

  • வசதிகள்: கார்ப்பரேட் பெட்டிகள், விஐபி லவுஞ்ச்கள், அதிநவீன ஊடக மையங்கள், வீரர்களுக்கான அனைத்து சர்வதேச வசதிகள் என எதுவும் குறையவில்லை!

  • மைதானத்தின் அளவு: வடக்கு முதல் தெற்கு வரை 140 மீட்டர், கிழக்கு முதல் மேற்கு வரை 170 மீட்டர் என சர்வதேச தரத்தில் களம் அமைக்கப்படுகிறது.

  • மேலும், பவுண்டரி எல்லைகள் 60 மீட்டர் முதல் 75 மீட்டர் வரை இருக்கும். (இதுவே பெரிய ஷாட்களை எதிர்பார்க்க வைக்கும்!)

  • 7 பிட்சுகள்: பிரதான மைதானத்துடன் சேர்த்து, அவுட்டோர் பயிற்சி வலைகள் மற்றும் ஏழு தரமான பிட்சுகள் இங்கே அமையவுள்ளன.

  • சின்னசாமிக்கு சவால்விடும் வடிகால்: பெங்களூரு சின்னசாமி மைதானத்தைப் போல, ஒரு நிமிடத்திற்கு 10,000 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் அதிவேக வடிகால் அமைப்பு இங்கே நிறுவப்படவுள்ளது. (மழையால் மேட்ச் தடைபடும் கவலை இனி இல்லை!)

நிதி மற்றும் ஒப்பந்த விவரங்கள்

இந்த பிரமாண்டத் திட்டம் பொது-தனியார் கூட்டுறவு (PPP) முறையில் செயல்படுத்தப்படுகிறது.

  • ஒப்பந்ததாரர் முழு கட்டுமானச் செலவையும் முதலில் ஏற்றுக் கொள்வார். அவர் அந்தச் செலவை, மைதானத்தின் வருவாயில் இருந்து அடுத்த 60 வருடப் பராமரிப்புக் காலம் முழுவதும் ஈடுசெய்து கொள்வார்.

  • இந்த டெண்டரில் பங்கேற்க, நிறுவனங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்தது ₹300 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களை அல்லது 3 லட்சம் சதுர அடி கட்டுமானப் பணிகளை முடித்திருக்க வேண்டும்.

நிர்வாக அமைப்பு: ஒரு 'Golden Equity' பங்கு!

இந்த பிரமாண்டத் திட்டத்தை நிர்வகிப்பதற்காக, TIDCO ஒரு Special Purpose Vehicle (SPV) என்ற ஒரு தனிக் குழுவை உருவாக்க உள்ளது.

இந்தக் குழுவில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு (SDAT) ஒரு 'Golden Equity Share' வழங்கப்படும்.

மேலும், SDAT மற்றும் TIDCO ஆகிய இரண்டுக்கும் தலா இரண்டு இயக்குநர் குழு இடங்கள் (Board Seats) வழங்கப்படும். இது திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்புக்கு உறுதி அளிக்கிறது.

முக்கியத் தகவல்: SDAT மற்றும் TIDCO-விற்கு இடையேயான வருவாய் பங்கீட்டு விகிதம் (Revenue Sharing) இன்னும் முடிவாகவில்லை.

தொழில்நுட்ப உள்ளீடுகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. மற்ற நிர்வாக அம்சங்கள் காலப்போக்கில் இறுதி செய்யப்படும் என்று SDAT தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொக்கேஷன்: ஒண்டிப்புதூர்!

ஒண்டிப்புதூரில் உள்ள திறந்தவெளிச் சிறைச்சாலை அருகே, NH81 நெடுஞ்சாலையில் இந்த 30 ஏக்கர் பிரமாண்ட வளாகம் அமையவுள்ளது.

இதில் 20 ஏக்கர் மைதானத்திற்கும், மீதமுள்ள 10 ஏக்கர் வணிக வளாகம் மற்றும் பல அடுக்கு பார்க்கிங்கிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாற்று ஏற்பாடு: சிறைச்சாலையின் கோரிக்கை

மைதானம் அமையவுள்ள நிலம் திறந்தவெளிச் சிறைச்சாலையின் பகுதியாகும். இந்த இடத்தில் சுமார் 943 தென்னை மரங்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும்.

  • தற்போது, இந்த இடத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், கீரை மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளைச் சாகுபடி செய்து, தினசரி 2,300க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு உணவு தயாரிக்கும் கோவை மத்திய சிறைச்சாலையின் சமையலறைக்கு வழங்கி வருகின்றனர்.

  • இந்தச் சாகுபடியின் இழப்பை ஈடுசெய்யும் விதமாக, சிறை அதிகாரிகள் அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர்:

  • மாற்றுத் திறந்தவெளிச் சிறை மற்றும் பிற வசதிகளை அமைக்க 81 ஏக்கர் கூடுதல் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இந்தியக் கிரிக்கெட் ஜெர்சியில் புதிய முத்திரை: கோடிக் கணக்கான கனவுகளுடன் கைகோத்த அப்போலோ டயர்ஸ்!
Concept illustration showing Coimbatore international cricket stadium at night

இனிமேல், சென்னை சேப்பாக்கம் மைதானத்தை மட்டுமே நம்பியிருந்த கோவை ரசிகர்கள், தங்கள் மண்ணிலேயே விராட் கோலி, ரோஹித் சர்மா, மற்றும் உலகத் தரம் வாய்ந்த வீரர்களைக் காணத் தயாராகலாம்!

இந்தத் திட்டம் நிச்சயம் கோயம்புத்தூரின் முகவரியை உலக அரங்கில் மாற்றும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com