கலெக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

கலெக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மிழ்நாட்டின் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு, திருப்பூர், சிவகங்கை, தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், திண்டுக்கல், மதுரை மாவட்ட கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாற்றல் விபரம்: கடலூர் கலெக்டராக அருண் தம்புராஜ், புதுக்கோட்டை கலெக்டராக மெர்ஸி ரம்யா, தூத்துக்குடி கலெக்டராக ராகுல்நாத், நாமக்கல் கலெக்டராக உமா, காஞ்சிபுரம் கலெக்டராக கலைச்செல்விமோகன், செங்கல்பட்டு கலெக்டராக கமல் கிஷோர், மதுரை மாவட்ட கலெக்டராக சங்கீதா, சிவகங்கை கலெக்டராக ஆஷா அஜீத், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக தீபக் ஜேக்கப், தூத்துக்குடி கலெக்டராக ராகுல்நாத், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக விஷ்ணு சந்திரன், ஈரோடு மாவட்ட கலெக்டராக ராஜகோபால் சங்கரா, திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிருஸ்துதாஸ், திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக பூங்கொடி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக சராயு, நாகை மாவட்ட கலெக்டராக ஜான் டாம் வர்கீஸ், அரியலூர் மாவட்ட கலெக்டராக ஆனி மேரி சொர்ணா உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com