Gavel, cracked scale, banker with contract—no court power.
Court gavel vs. bank vault: justice scale tips to banks.

லோன் வாங்கியவர்களே உஷார்..! இனி கடன் விஷயத்தில் வங்கிகள் எடுக்கும் முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது..!

Published on

வங்கி கொடுத்த கடனின் விதிமுறைகளை மாற்றி அமைக்கச் சொல்லவோ அல்லது கடனை ஒரே தடவையில் செட்டில் செய்யும் திட்டத்தில் (One-Time Settlement - OTS) சலுகை கொடுக்கும்படி வங்கிகளைக் கட்டாயப்படுத்தவோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

இனிமேல், கடன் விஷயத்தில் வங்கிகள் எடுக்கும் வியாபார முடிவுகளில் (Commercial Decisions) நீதிமன்றங்கள் தலையிட முடியாது.

"போட்ட ஒப்பந்தத்தை நாங்க மாத்தி எழுத முடியாது!"

நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ரஜ்னீஷ் வியாஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இது குறித்து ரொம்பவே காட்டமாகப் பேசியுள்ளது.

"கடன் கொடுக்கும்போது நீங்களும், வங்கியும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் தெளிவாக நிபந்தனைகள் உள்ளன.

அந்த ஒப்பந்தத்தை, நீதிமன்றத்தால் 'திருத்தி எழுதுங்கள்' என்று வங்கிகளுக்கு உத்தரவிட முடியாது.

கடன் வாங்கியவர்களுக்கோ அல்லது அதற்கு உத்தரவாதம் அளித்தவர்களுக்கோ OTS சலுகை வழங்குமாறு கட்டாயப்படுத்துவது நியாயம் கிடையாது."

ரூ. 62 கோடி கடன் தொடர்பான வழக்கில், ஒரு கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் தாக்கல் செய்த மனுவை விசாரித்துவிட்டு நீதிமன்றம் இதைத் தள்ளுபடி செய்தது.

பேங்க்குக்கு உள்ள 'பவர்'!

வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரமும், புத்திசாலித்தனமும் (Commercial Wisdom) முழுக்க முழுக்க வங்கிகளிடமே உள்ளது என்று உயர் நீதிமன்றம் அழுத்தமாகச் சொன்னது.

  • கடன் வாங்கியவருக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் சக்தி இருக்கிறது என்று வங்கி நம்பினால், அல்லது அடமானம் வைத்த சொத்தை ஏலம் விட்டால் முழுப் பணத்தையும் திரும்ப எடுத்துவிட முடியும் என்று வங்கி நினைத்தால், அவர்களுக்கு OTS சலுகை தர மறுப்பது முற்றிலும் சரியே என்று நீதிமன்றம் அறிவித்தது.

'பேச்சு மாறக்கூடாது!' – நீதிபதிகளின் கண்டிப்பு

திவால் சட்டம் (Insolvency Laws) என்பது கம்பெனிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

கம்பெனியைப் புதுப்பிக்கச் சட்டம் உதவலாம். ஆனால், கடன் வாங்கியவர் கடனாளியாகவே இருக்கிறார். கடனைத் திருப்பித் தரவில்லை.

எல்லாவற்றையும் புரிந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பிறகு, "பேச்சை மாற்றி, பொறுப்பிலிருந்து விலக நினைக்கக்கூடாது."

"நியாயம்" என்றால், ஒப்புக்கொண்ட நேரத்துக்குள் நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதுதான் என்று நீதிபதிகள் கடைசியாகக் கூறி, கடன் வாங்கியவருக்கு நீதிமன்றத்தின் மூலம் எந்த நிவாரணமும் கிடைக்காது என்று தெளிவுபடுத்தினர்.

இதையும் படியுங்கள்:
ரிசர்வ் வங்கி அறிவிப்பு: தங்கப் பத்திர திட்டத்தில் 108% லாபம். உங்க கிட்ட தங்கப் பத்திரம் இருக்கா...?
Gavel, cracked scale, banker with contract—no court power.

இந்தத் தீர்ப்பு, இனிமேல் கடன் வாங்கிவிட்டுச் சிக்கலில் மாட்டுபவர்களுக்கு நீதிமன்றத்தின் கதவுகள் எளிதில் திறக்காது என்பதைக் காட்டுவதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com