கருப்பையில் தொற்று ஏற்பட்ட 2 குழந்தைகளுக்கு COVID-19 மூளை பாதிப்பை ஏற்படுத்தியது: ஆய்வு முடிவு வெளியீடு!

கருப்பையில் தொற்று ஏற்பட்ட 2 குழந்தைகளுக்கு COVID-19 மூளை பாதிப்பை ஏற்படுத்தியது: ஆய்வு முடிவு வெளியீடு!

இந்த ஆய்வு முடிவின் எதிரொலியாக கர்ப்பத்தை கருத்தில் கொண்டு பெண்கள் கோவிட் தடுப்பூசி போட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

COVID-19 வைரஸ் தாயின் நஞ்சுக்கொடிக்குள் ஊடுருவியதன் விளைவாக மூளை பாதிப்புடன் பிறந்த குழந்தைகளின் முதல் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் என்று புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட மியாமி பல்கலைக்கழக ஆய்வின்படி, 2020 ஆம் ஆண்டில் டெல்டா வேரியண்ட் வைரஸின் உச்சக்கட்ட பரவலின் போது - தடுப்பூசிகள் கிடைப்பதற்கு முன், இரண்டு குழந்தைகளும் தங்கள் இரண்டாவது மூன்று மாதங்களில் (செகண்டு ட்ரைமெஸ்டர்) வைரஸ் பாஸிட்டிவ் ரிசல்ட் பெற்ற இரு இளம் தாய்மார்களுக்கு பிறந்தன. பிறந்த உடனேயே அதே நாளில், இரண்டு குழந்தைகளும் வலிப்புநோய் தாக்கங்களை (seizures) அனுபவித்தன, பின்னர் குறிப்பிடத்தக்க வளர்ச்சி தாமதங்களை சந்தித்தன. ஒரு குழந்தை 13 மாதங்களில் இறந்த நிலையில், மற்றொன்று ஹாஸ்பிடல் பராமரிப்பில் வைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சோதனையில் இரண்டு குழந்தைகளுக்கும் வைரஸ் பாஸிட்டிவ் ரிசல்ட் இல்லை, ஆனால் அவர்களின் இரத்தத்தில் அதிக அளவு கோவிட் ஆன்டிபாடிகள் இருந்தன என்று மியாமி பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவம் மற்றும் உதவி பேராசிரியரான டாக்டர் மெர்லைன் பென்னி கூறினார். இந்த வைரஸ் தாயிடமிருந்து நஞ்சுக்கொடிக்கும் பின்னர் குழந்தைக்கும் பரவக்கூடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்று அவர் கூறினார்.

இரண்டு தாய்மார்களின் நஞ்சுக்கொடிகளிலும் வைரஸ் இருப்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இறந்த குழந்தையின் மூளையின் பிரேதப் பரிசோதனையும் மூளையில் வைரஸின் தடயங்களைக் காட்டியது, நேரடி தொற்று காயங்களை ஏற்படுத்தியது என்று டாக்டர் பென்னி கூறினார்.

ஆய்வின்படி, இரண்டு தாய்மார்களும் வைரஸ் பாஸிட்டிவ் பரிசோதனை செய்தனர். ஒருவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தது மற்றும் குழந்தையை முழுப்பருவத்திற்கு கொண்டு சென்றது, மற்றொரு தாய் மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தாள், மருத்துவர்கள் 32 வாரங்களில் குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.

மியாமி பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் ஷாஹனாஸ் துவாரா, இந்த வழக்குகள் அரிதானவை என்று தான் நம்புவதாகக் கூறினார், ஆனால் கர்ப்ப காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சி தாமதங்களை குழந்தை மருத்துவர்களிடம் ஆலோசித்து சரிபார்க்கும்படி வலியுறுத்தினார். "குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வரை, ஏழு அல்லது எட்டு வயது வரை விஷயங்கள் மிகவும் நுட்பமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்," என்று அவர் கூறினார்.

கர்ப்பத்தை கருத்தில் கொண்டுள்ள பெண்களுக்கு COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடுமாறு ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் காயங்கள் கோவிட் டெல்டா வகைக்கு தனித்துவமானதா அல்லது ஓமிக்ரான் தொடர்பான மாறுபாடுகளுடன் ஏற்படுமா என்பது தெளிவாக இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இது சாத்தியம் என்று முன்னர் மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக ஆய்வு குறிப்பிட்டது, ஆனால் இப்போது வரை, தாயின் நஞ்சுக்கொடி அல்லது குழந்தையின் மூளையில் COVID-19 இன் நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை.

மியாமி பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் மைக்கேல் பைடாஸ் கூறுகையில், "இடமாற்றம் செய்யப்பட்ட கருவின் உறுப்புகளில் வைரஸை நாங்கள் நிரூபிக்க முடிந்தது இதுவே முதல் முறை. "அதனால்தான் இது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com