ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறை வருவதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பலரும் பொது போக்குவரத்தையே நம்பி இருக்கின்றனர். பேருந்தில் ட்ராபிக் அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் எலெக்ட்ரிக் ரயில் அல்லது மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். பொதுவாகவே மெட்ரோ ரயில் இரவு 8 மணி வரை இயக்கப்படும். ஆனால், போக்குவரத்து நெரிசல் ஆகும் சமயங்களில், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நேரங்களில் அவ்வபோது மெட்ரோ நிர்வாகம் ரயில் சேவை நேரத்தை நீட்டிக்கும்.
இந்த நிலையில் தற்போது விஜயதசமி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை, வார விடுமுறை நாட்கள் என தொடர்ந்து விடுமுறை வருகிறது. அதனால் சென்னையில் தங்கி பணிபுரியும் பிற மாவட்ட மற்றும் பிற மாநில பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது அக்டோபர் 20ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் அனைவரும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அடுத்தடுத்து மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி எளிதாக சென்றடைய வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.