திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரத்தி 999 ரூபாய் திருடப்பட்டு இருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி மாறன் கோபாலபுரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் 8.10. 2023 அன்று மலேசியாவில் இருந்து மூன்று முறை தயாநிதி மாறனுடைய மனைவிக்கு மிஸ்டு கால் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து வந்த காலில் இந்தியில் பேசிய நபர் உங்கள் வங்கியில் இருந்து 99 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு இருக்கிறதா என்று கேட்டு விசாரித்துள்ளார்.
மேலும் அவரது மனைவியிடம் ஓடிபியையும் கேட்டு உள்ளார். ஆனால் தயாநிதிமாறனின் மனைவி எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் வங்கி தொலைபேசி எண்ணிற்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அந்த எஸ் எம் எஸ்-யில் வங்கி கணக்கிலிருந்து 99 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
அதேநேரம் வங்கிக் கணக்குடன் தயாநிதிமாறன் தொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ள நிலையில் எப்படி அவரது மனைவியின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஓடிபி கேட்டது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு தனது புகார் கடிதத்தில் தயாநிதிமாறன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து சென்னை பெருமாநகர கமிஷனர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.