கத்தார் கால்பந்து போட்டி: பரிசுக் கோப்பையை அறிமுகம் செய்கிறார் தீபிகா படுகோனே! 

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே கத்தார் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைக்கிறார்.

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி அந்நாட்டில் உள்ள லுஸைல் ஐகானிக் மைதானத்தில் டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பரிசுக் கோப்பையை அறிமுகம் செய்து வைக்கிறார்.

இந்த அங்கீகாரம் பெறும் முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமை தீபிகாவுக்கு கிடைக்கப் பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தீபிகா படுகோன் விரைவில் கத்தாருக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com