டெல்லியை உலுக்கிய காற்று மாசு...! 2,00,000 பேர் சுவாசக்கோளாறால் அவதி..!!

A child in a hospital in New Delhi, under a nebulizer,
A child in a hospital in New Delhi,PIC : ARUN SANKAR / AFP
Published on

நம்ப முடியாத ஒரு கசப்பான உண்மை நம்பித் தான் ஆகவேண்டும்.இது நடப்பது எங்கோ தொலை தூர தேசமல்ல...நமது இந்தியாவின் தலைநகரம், டெல்லி. அதன் சொந்தக் காற்றே இப்போது மரணத்தை விதைக்கும் விஷப் புகையாக மாறியிருக்கிறது. 

People with masks hold signs demanding action on Delhi pollution
Delhi families protest toxic air, urging action to save children

மத்திய அரசே நாடாளுமன்றத்தில் அளித்த அதிர்ச்சித் தகவலின்படி, 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான வெறும் மூன்று வருட காலத்தில், டெல்லியில் உள்ள ஆறு முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2,00,000க்கும் மேற்பட்ட கடுமையான சுவாச நோய்கள் பதிவாகியுள்ளன.

டெல்லியின் இந்த நச்சுக் காற்று பாதிப்பு ஆண்டுதோறும் குறையாமல் தொடர்வதைச் சமீபத்திய புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. 

டெல்லியில் உள்ள ஆறு பெரிய மருத்துவமனைகளில் பதிவான கடுமையான சுவாச நோய்களின் விவரம் இதோ:

  • 2022 ஆம் ஆண்டில்: 67,054 பதிவுகள்

  • 2023 இல்: 69,293 பதிவுகள்

  • 2024 இல்: 68,411 பதிவுகள்

இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்னவென்றால், இந்த மூன்று ஆண்டுகளில் 30,000க்கும் அதிகமான அப்பாவிகள் மூச்சுத் திணறல் தாங்காமல் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது.

டெல்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், குறிப்பாகக் குளிர்காலத்தின் பனி விலகும் நேரத்தில், இந்தப் பிரச்சினை என்பது ஆண்டுதோறும் திரும்பத் திரும்ப வந்து மிகப்பெரிய விஷச் சுழற்சியாகிவிட்டது.

WHO எச்சரிக்கையை மீறிய 20 மடங்கு அபாயம்!

உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்த பாதுகாப்பான காற்று மாசு வரம்பைவிட, டெல்லியின் Air Quality Index (AQI) - அதாவது நாம் சுவாசிக்கும் காற்றின் தர அளவீடு - 20 மடங்குக்கும் அதிகமாக உள்ளது!

இந்த அதிகபட்ச மாசுபாட்டின் செறிவு, நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு காற்றையும் தீவிரமாக நஞ்சாக்கி வருகிறது.

நுரையீரலை அடைக்கக்கூடிய நுண்ணிய துகள்களான PM2.5-இன் அளவு, ஆரோக்கியமான மனிதர்களுக்குக்கூடத் தீங்கு விளைவிக்கும் அபாயகரமான அளவை (400 புள்ளிகள்) கடந்த பத்தாண்டுகளில் பலமுறை தாண்டியிருக்கிறது.

சாதாரணமான ஒரு நாளே 380-ஐத் தொடும்போது, ஏற்கனவே நோய் பாதிப்பு உள்ளவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள்!

அவர்கள் ஒவ்வொரு நாளும் காற்று மாசுடன் வாழ்கிறார்கள்.டெல்லியுடன் இந்த அபாயம் நின்றுவிடப் போவதில்லை.

ஏனெனில் காற்று எல்லைகளைக் கடந்து பயணிக்கிறது. உங்கள் நுரையீரல் தான் உங்கள் கடைசிக் கோட்டை.

உங்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் இப்போதே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது, வெளிப்புற விளையாட்டுகளைக் குறைப்பது என ஒவ்வொரு செயலிலும் எச்சரிக்கை அவசியம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com