டெல்லியை சூழ்ந்த கனமழை: ரெட் அலர்ட் அறிவிப்பு..!

Water logging after heavy rain in Connaught Place in New Delhi on Tuesday.
Delhi Rain Image : (Arvind Yadav/HT Photo)
Published on

டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கனமழை பெய்ததால் நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி, பல முக்கிய சாலைகள் நீரில் மூழ்கி, போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டு, அடுத்த சில நாட்களில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. 

கன்னாட் பிளேஸ், பிரகதி மைதானம், பஞ்ச்குயான் ரோடு போன்ற இடங்களில் தண்ணீர் தேங்கி நீண்ட போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு, பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

Delhi waterlogged, Traffic Jam
Delhi RainImage : PTI

மஹாராணி பாக், CV ராமன் மார்க், மற்றும் கன்னாட் பிளேஸ் வெளிபுறப் பகுதிகள் போன்ற இடங்களில் சாலைகள் முழுமையாக நீரில் மூழ்கி, வாகனங்கள் தண்ணீரில் மிதந்து, போக்குவரத்து மெதுவாக நகர்ந்து வருகிறது.

முன்னாள் டெல்லி முதலமைச்சர் அத்தீஷி, பாஜக தலைமையிலான மாநில அரசை கடுமையாக விமர்சித்து, நகரின் உள்கட்டமைப்பு நிலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். "10 நிமிட மழையில் பஞ்ச்குயான் ரோடு இந்த நிலையில் உள்ளது! 

PWD அமைச்சர் எங்கே இருக்கிறார்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முதலமைச்சர் ரேகா குப்தா இந்த நெரிசல்களின் போது அலட்சியமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

மற்றொரு பதிவில், "சிவில் லைன்ஸ், LG மற்றும் முதலமைச்சரின் வீடுகள் உள்ள இடம்... சாலைகள் தண்ணீரால் நிரம்பியுள்ளன. 10 நிமிட மழையால் டெல்லியின் இந்த நிலை" என்று கூறி, தண்ணீர் தேங்கிய காட்சிகளை பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி, பாஜக மற்றும் ஆம் ஆத்மி அரசுகளை கண்டித்து, இது ஆட்சியில் தோல்வி எனக் கூறினார். "அனைவரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மாணவர்கள், தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தாமதமாகியுள்ளனர். 

டெல்லியின் 90% பகுதிகள் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளன. பாஜக ஆம் ஆத்மியை குற்றம் சாட்டுகிறது, ஆம் ஆத்மி பாஜகவை குற்றம் சாட்டுகிறது, ஆனால் பாதிக்கப்படுவது டெல்லி மக்கள்தான்" என்று PTI-க்கு தனது வருத்தத்தை அவர் தெரிவித்தார்.

வானிலை முன்னறிவிப்பு:

IMD, ஆகஸ்ட் 3 வரை டெல்லி மற்றும் NCR-யில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மிதமான முதல் கனமழையுடன் மின்னல் மற்றும் 30-40 கிமீ/மணி வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. 

கிழக்கு NCR-க்கு சிவப்பு எச்சரிக்கை உள்ள நிலையில், மற்ற பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி வரை 24 மணி நேரத்தில் டெல்லி 8 மிமீ மழை பதிவாகியுள்ளது. 

குறைந்தபட்ச வெப்பநிலை 26.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி, இது இந்த சீசனுக்கான சராசரியை விட சற்று குறைவாக உள்ளது. ஈரப்பதம் 70% ஆக பதிவாகியுள்ளது. கனமழையை அடுத்தும், டெல்லியின் காற்று தரம் திருப்திகரமான நிலையில் உள்ளது, மைய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் (CPCB) படி AQI 87 ஆக பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
வடக்கு ஒடிசாவில் வெள்ளம்: கிராமங்கள் துண்டிப்பு, பயிர்கள் மூழ்கி, பாதைகள் சேதம்
Water logging after heavy rain in Connaught Place in New Delhi on Tuesday.

டெல்லி மக்கள் இந்த மழை நிலைமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அதிகாரிகள் தண்ணீர் தேங்கியதை அகற்றி, போக்குவரத்து பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com