சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் இவ்வளவு பேர் பயணித்திருக்கிறார்களா?

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 66 லட்சத்து 85 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூலம் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்கள், சென்னைவாசிகள், போக்குவரத்து நெரிசல் இன்றியும், வேகமாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவும் உதவி வருகிறது. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து பயன் பெற்று வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்களில் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கி வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

metro train
metro train

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 28.04.2023 அன்று 2,68,680 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி, 23,39,724 பயணிகளும், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 39,83,119 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 3,56,489 பயணிகளும், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 4,136 பயணிகளும், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 1,964 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com