தீபாவளி முகூர்த்த டிரேடிங்; 1 மணி நேர பங்குச் சந்தை!

பங்குச் சந்தை
பங்குச் சந்தை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) ஆகியவை தீபாவளி பண்டிகை மற்றும் லக்ஷ்மி பூஜையை முன்னிட்டு இம்மாதம் 24-ம் தேதி விடுமுறை விடப்படுகிறது.

ஆனாலும் தீபாவளி முகூர்த்த டிரேடிங் என்று அன்றைய தினம் இரண்டு பங்குச் சந்தைகளும் ஒரு மணி நேரம் செயல்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகாலமாக பாரம்பரியமாக தீபாவளி பண்டிகையன்று ‘தீபாவளி முகூர்த்த டிரேடிங்’ என்ற பெயரில், இந்த 2 பங்குச் சந்தைகளிலும் ஒரு மணி நேரம் வர்த்தகம் நடைபெறுகிறது. தீபாவளி நன்னாளில் நடைபெறும் இந்த முகூர்த்த வர்த்தகத்தால் ஆண்டு முழுவதும் செல்வத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.

அதன்படி, ஈக்விட்டி மற்றும் டெரிவேடிவ்ஸ் பிரிவில் வர்த்தகம் மாலை 6:15 மணிக்கு தொடங்கி இரவு 7:15 மணிக்கு நிறைவடையும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த தீபாவளி முகூர்த்த டிரேடிங் நேரத்துக்காக காத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com