திமுக எம்.பி ஆ. ராசாவின் ரூ.55 கோடிக்கான சொத்து முடக்கம்!

ஆ. ராசா
ஆ. ராசா
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

திமுக முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திமுக எம்.பியுமான ஆ. ராசாவிற்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

-இதுகுறித்து அமலாக்கத்துறை சார்பாக தெரிவிக்கப் பட்டதாவது;

திமுக மக்களவை உறுப்பினரான ஆ. ராசா, கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007 வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு முறைகேடாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி, அதன் பயனாக பினாமி நிறுவனத்தின் பெயரில் ஆ.ராசா ரூ.55 கோடி ரூபாய்க்கு 45 ஏக்கர் நிலத்தை கோயம்புத்தூரில் வாங்கியதாகவும் அந்த நிலத்தை முடக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆ. ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 16 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015–ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.  இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ குற்றப் பத்திரிகை  தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com