பட்டாசு கொண்டு போறீங்களா? கண்காணிப்பு தீவிரம்!.

கண்காணிப்பு தீவிரம்
கண்காணிப்பு தீவிரம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன.

ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பட்டாசுகள் போன்ற பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் வியாபாரிகள் அல்லது பயணியர் சிலர் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பர்.

இதை தடுக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ' தீபாவளி என்றால் கொண்டாட்டம், பட்டாசு எடுத்து சென்றால் திண்டாட்டம் என்ற தலைப்பில், துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

பட்டாசுகள்
பட்டாசுகள்

இது குறித்து சென்னை ரயில் கோட்ட மேலாளர் கணேஷ் கூறுகையில், " ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல கூடாது. பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்.

தீபாவளி நெருங்கும் நிலையில், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன. மோப்ப நாய்கள் உதவியுடன் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com