உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்!

 டி.ஒய்.சந்திரசூட்
டி.ஒய்.சந்திரசூட்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

நாட்டின் உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் அடுத்தமாதம் (நவம்பர் 8) முடிவடைய உள்ளது.

அதையடுத்து உச்சநீதி மன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யும்படி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு கடந்த 7-ம் தேதி கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பெயரை யு யு லலித் பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமித்து குடியரசுதலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்கவுள்ளார்.

கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

பின்னர் 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வரை அப்பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com