

சேலம் சிலுவம்பாளையத்தில் இபிஎஸ் வாக்களித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு நாளான இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம், சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு, அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தங்கள் வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.