பறக்கும் படை அதிரடி: கனிமொழி எம்.பி-யின் வாகனத்தில் தீவிர சோதனை..!

KANIMOZHI
KANIMOZHI
Published on

சட்டமன்ற தேர்தலுக்கு பரப்பரை மேற்கொள்வதற்காக , திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது வாகனத்தை வழிமறித்து பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் , பல அரசியல்வாதிகளின் பரப்புரை வாகனங்களும், அவர்களின் தனிப்பட்ட வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதுபோலவே கனிமொழியின் வாகனமும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.  தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா ? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறது. கனிமொழி வாகனம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போது அவர் பறக்கும் படை அதிகாரிகளுக்கு நன்கு ஒத்துழைத்துள்ளார்.

ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த சோதனையில் , சந்தேகத்திற்கு இடமான எந்த பொருளும் பணமும் கைப்பற்றப்படவில்லை. சோதனை முடிந்த பின்னர் பறக்கும் படை அதிகாரிகள் கனிமொழியை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர். இதற்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் , மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வாகனங்களும் பறக்கும்படி அதிகாரிகளால் சோதனைக்குள்ளாகப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com