நாளை குரூப் 1 முதல் நிலை தேர்வு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்!

மொத்தமுள்ள 92 காலி பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருக்கிற குரூப் 1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், மொத்தமுள்ள 92 காலி பணியிடங்களுக்கு , 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தவகையில் முதல்நிலைத் தேர்வு கடந்த அக்டோபர் 30-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.

குரூப் 1 முதல் நிலை தேர்வு
குரூப் 1 முதல் நிலை தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு குறித்து அறிவித்திருந்தது. அதில், 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர்கள், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் பதவிகள் என 92 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்திருந்தது. நாளை இதற்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com