தொடர்ந்து அதிகரிக்கும் 5ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை; புட்டு புட்டு வைக்கும் புள்ளிவிவரங்கள்!

5G
5G
Published on

தொடர்ந்து அதிகரிக்கும் 5ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை. 2024 இறுதியில் 5ஜி வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியாக உயரும். 2030க்குள் 970 மில்லியனைத் தொடும்.

இந்தியாவில் 5ஜி செல்போன் சேவை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு, 5ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 11 கோடி முதல் 12 கோடி வரை இருந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது 27 கோடியாக உயரும் என்று எரிக்சன் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

இது, மொத்த செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் 23 சதவீதம் ஆகும். அதே சமயத்தில், தற்போது, 54 சதவீதமாக இருக்கும் 4ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 2030-ம் ஆண்டுக்குள் 18 சதவீதமாக குறையும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் 5G வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2030க்குள் 3 மடங்கு அதிகரித்து 970 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் மொத்த மொபைல் வாடிக்கையாளர் தளத்தில் 74 சதவீதமாக இருக்கும் என்று எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ericsson Consumer Lab ஆய்வு அறிக்கையின்படி, ஒரே நேரத்தில் ஜெனரேட்டிவ் AI பயன்பாடுகள், 5G செயல்திறனுக்கான முக்கிய உந்து காரணியாக விளங்குகின்றன.

எரிக்சன் மொபிலிட்டி அறிக்கை, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் 5G சந்தாக்கள் 270 மில்லியனை எட்டும் என்று மதிப்பிடுகிறது. இது நாட்டின் மொத்த மொபைல் சந்தாக்களில் 23 சதவிகிதம் ஆகும்.

"5G சந்தா எண்கள் 2027-ம் ஆண்டில் உலகளாவிய 4G சந்தாக்களின் எண்ணிக்கையை முந்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 6G வரிசைப்படுத்தல்கள் 2030-ல் எதிர்பார்க்கப்படும்" என்று ஜிண்டால் கூறினார்.

இதையும் படியுங்கள்:
இனி Google Maps-இல் காற்றின் தரத்தைக் கூட கண்காணிக்கலாம்… செம அப்டேட்! 
5G

Ericsson Consumer Lab அறிக்கையின்படி, Gen AI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் உரிமையாளர்களின் எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்தியாவில் 5G ஸ்மார்ட்போன் பயனர்களில் சுமார் 67% பேர் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வாரந்தோறும் Gen AI பயன்பாடுகளைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்கள் வீடியோ அழைப்பு, ஸ்ட்ரீமிங் மற்றும் ஆன்லைன் பேமெண்ட்டுககளின் உத்தரவாதமான செயல்திறனுக்காக கூடுதல் கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாக அது கூறுகிறது.

"5G பயனர்களில் ஆறில் ஒருவர், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், உறுதிசெய்யப்பட்ட இணைப்புக்காகத் தங்களின் தற்போதைய மாதாந்திர மொபைல் செலவில் 20 சதவிகிதத்தைச் செலுத்தத் தயாராக உள்ளனர்" என்று எரிக்சனின் நுகர்வோர் லேப் தலைவர் ஜஸ்மீத் சேத்தி கூறியுள்ளார்.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com