வேலைக்கே போகாத மனைவிக்கு மொத்தமாக 30 லட்சம் 'சம்பளம்' - அதிகாரி போட்ட கில்லாடி திட்டம்..!

A man in dark office fakes wife’s job in two tech firms
Man uses wife’s name in fake job deal with tech companies
Published on

ராஜ் காம்ப் இன்ஃபோ சர்வீசஸ் லிமிடெட் அதிகாரி பிரத்யுமன் தீக்‌ஷித் மீது ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) பதிவு செய்துள்ள வழக்கு.

ராஜஸ்தான்ல நடந்த இந்தச் சம்பவம், லஞ்சப் பணத்தை எப்படிச் 'சம்பளம்' என்ற பேர்ல மறைச்சு, சட்டப்படி சரியான பணமா மாத்தலாம்னு ஒரு அதிகாரி போட்ட சதித் திட்டத்தை வெளியிட்டிருக்கு.

தலை சுத்துது! அதிகாரி போட்ட திட்டம் என்ன?

ராஜ் காம்ப் இன்ஃபோ சர்வீசஸ் லிமிடெட்-டோட இணை இயக்குநர் பிரத்யுமன் தீக்‌ஷித்.

சக்தி வாய்ந்த அதிகாரம் உள்ள பதவி. இவர்தான் தனியார் கம்பெனிகளுக்கு அரசாங்க ஒப்பந்தங்கள் கொடுப்பாரு.

பொதுவா, லஞ்சப் பணத்தை நேரடியாக வாங்கினா மாட்டிக்குவோம்னு தீக்‌ஷித் ரொம்பத் தந்திரமா யோசிச்சிருக்கார். இவருடைய திட்டம் இதுதான்:

1. லஞ்சப் பணத்துக்கு மாற்று வழி: தனக்கு லஞ்சமாக வர வேண்டிய 30 லட்ச ரூபாய்க்கு மேலான பணத்தை, நேரடியாக வாங்காமல், சட்டபூர்வமான 'சம்பளம்' என்ற வழியில தன் வீட்டுக்கு வர வைக்கணும்.

2. மனைவிதான் கருவி: இதுக்காகத் தன்னோட மனைவி பூனம் தீக்‌ஷித்தை ஒரு கருவியாப் பயன்படுத்தியிருக்கார்.

தான் ஒப்பந்தம் கொடுத்த ரெண்டு டெக் கம்பெனிகிட்டயும், "என் மனைவியை உங்க கம்பெனியில வேலை பார்க்கிற மாதிரி பேப்பர்ல மட்டும் காட்டுங்க.

ஆனா அவங்க வேலைக்கு வர மாட்டாங்க," என்று வற்புறுத்தியிருக்கார்.

3. சம்பளமாப் போடுங்க: மாசம் மாசம் அந்த லஞ்சப் பணத்தை, மனைவி பூனம் தீக்‌ஷித்தோட தனியார் பேங்க் அக்கவுன்ட்க்குச் சம்பளம் (Salary) என்ற பேர்லப் போடச் சொல்லியிருக்கார்.

வேலைக்கே போகாத மனைவிக்கு எப்படிச் சம்பளம்?

பூனம் தீக்‌ஷித் ஒருநாளும் அந்த ரெண்டு கம்பெனிக்கும் வேலைக்குப் போகவே இல்லை.

ஆனா, தீக்‌ஷித் இணை இயக்குநர் என்ற பெரிய அதிகாரத்துல இருந்ததால, அவர் தன் மனைவியோட அட்டெண்டன்ஸ் (வருகைப் பதிவு), வேலைக்கான மதிப்பீடு (Appraisal)ன்னு எல்லா பேப்பரையும் தானே கையெழுத்துப் போட்டு 'சரியானதாக' மாற்றியிருக்கலாம் என்று புலனாய்வுத் துறையினர் சந்தேகிக்கிறார்கள்.

அதாவது, அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஊழல் ஆவணங்களைச் சட்டப்பூர்வமான ஆவணங்களா மாத்தி, லஞ்சப் பணத்தைச் 'சம்பளமா' மாத்திட்டாரு.

இப்படி, 2019 மற்றும் 2020க்கு இடையில வேலைக்கே போகாத மனைவிக்கு ரெண்டு கம்பெனிகள் மூலமா, 30 லட்ச ரூபாய்க்கும் மேல பணத்தைச் சம்பளமா வர வச்சிருக்கார்.

லஞ்சத்தை வாங்குனாலும், அது 'சம்பளம்'னு கணக்குல வந்ததால யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிருக்கார்.

இப்போ என்ன ஆச்சு?

இவருடைய சதித் திட்டம் ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) கண்களுக்குத் தெரிஞ்சு போச்சு.

இவரு மேலயும், இவருடைய மனைவி பூனம் தீக்‌ஷித் மேலயும், இந்தத் தப்புக்கு உதவிய இன்னொரு ஊழியர் மேலயும் வழக்கு போட்டு விசாரிச்சிட்டு இருக்காங்க.

எவ்வளவு பெரிய அதிகாரியா இருந்தாலும், எவ்வளவு தந்திரமாத் திட்டம் போட்டாலும், பேராசையும், கள்ளத்தனமும் ஒரு நாள் வெளிய வந்தே தீரும்ங்கிறதுக்கு இது ஒரு நல்ல பாடம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com