நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ! பிப்ரவரி 1 பட்ஜெட் தாக்கல்!

நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ! பிப்ரவரி 1 பட்ஜெட் தாக்கல்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது குணமடைந்து வீடு திரும்பினார். இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கமான பரிசோதனைக்காக தான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நிர்மலா சீதாராமன் 2023 ஆண்டிற்கான பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

63 வயதாகும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என தற்போது தகவல்கள் வந்திருக்கிறது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். நெஞ்சு எரிச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர்.

இந்த நிலையில், தற்போது அவர், குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இருப்பினும் அவரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com