“ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்” என வெளியுறவுத்துறை அமைச்சர் ட்வீட்!

“ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்” என வெளியுறவுத்துறை அமைச்சர்  ட்வீட்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

“ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், அமெரிக்க சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுங்கள்” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் உளவு பார்த்ததற்காக கூறி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.

ரஷ்யா உக்ரைன் போர் துவங்கிய பிறகு அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பெரும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதும் அனைவரும் அறிந்ததே.

இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், “ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், அமெரிக்க சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுங்கள்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட 31 வயதான அமெரிக்க செய்தியாளர் கெர்ஷ்கோவிச், மாஸ்கோவில் உள்ள தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில், AFP பணியாற்றினார். அவர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடங்கி ஏறத்தாழ ஒரு வருடம் ஆகியும் இன்னும் போர் முடிவதாக தெரியவில்லை.பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது. ரஷ்ய பொருளாதாரமும் முடங்கி இருக்கிறது. ஒட்டுமொத்த அளவில் இந்தப் போர் ரஷ்யா மற்றும் உக்ரைனிலும், உலக அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் பணவீக்கத்துக்கும் இது காரணமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ரஷ்யாவிற்கும் பல்வேறு உலக நாடுகளுக்கும் தினம் ஒரு பிரச்சனைகளாக இருந்து வருவதும் வாடிக்கையாகி விட்டது. .

logo
Kalki Online
kalkionline.com