இலவச கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

இலவச கான்கிரீட் வீடு
இலவச கான்கிரீட் வீடு
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கள்ளக்குறிச்சி கூட்டத்தில் 2026 தேர்தலை இலக்காக வைத்து பட்டியலின தம்பதிகளுக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கினார். குறிப்பாக, பட்டியலின மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்லும் பட்டியலின தம்பதிகளுக்குத் திருமணப் பரிசாக இலவசக் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வாங்கித் தரப்பட்டு, கௌரவமான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அதிமுக முன்னுரிமை அளிக்கும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திமுக அரசால் நிறுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, குறிப்பாகத் 'தாலிக்கு தங்கம்' திட்டம், மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி மற்றும் பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்கும் திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என்றார். மேலும், திருமணத்தின் போது மணமக்களுக்குப் பட்டுச் சேலை மற்றும் பட்டு வேட்டி, சட்டையும் வழங்கப்படும் எனப் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட 'பசுமை வீடுகள்' திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய வீட்டு வசதித் திட்டம் அமையும் என அவர் விளக்கமளித்தார்.

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர், முழுநேர டிஜிபி இல்லாததால் தமிழகம் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகக் காரணம் என்று சாடிய அவர், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் 5 சதவீதத்தைக் கூட நிறைவேற்றவில்லை என்று சாடினார். மேலும், திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் மது விற்பனை மற்றும் நகராட்சி நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆட்சி மாற்றத்திற்குப் பின் முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

அதிமுக மற்றும் திமுகவின் சாதனைகள் குறித்துப் பொது மேடையில் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடிச் சவால் விடுத்த எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தன்னம்பிக்கையுடன் குறிப்பிட்டார். அதிமுகவின் இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் குறிப்பாகப் பட்டியலின மக்கள் மற்றும் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை முடுக்கிவிட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
#BREAKING : கரூர் சம்பவம்: ஜன.12ல் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்..!
இலவச கான்கிரீட் வீடு
logo
Kalki Online
kalkionline.com