குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றி பார்க்கலாமா?

குடியரசுத் தலைவர் மாளிகை
குடியரசுத் தலைவர் மாளிகை
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக டிசம்பர் 1-ம் தேதி முதல் திறந்து விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து குடியரசு மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

குடியரசுத் தலைவர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக டிசம்பர் 1-ம் தேதி முதல் திறந்து விடப்படுகிறது.

பொதுமக்கள் முன்பதிவு செய்துவிட்டு வர அனுமதிக்கப் படுவர். அப்படி முன்பதிவு செய்தவர்கள் காலை 10 முதல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள்.

அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து வாரத்தில் ஐந்து நாட்கள் பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றிப் பார்க்க விரும்புபவர்கள், இணையதளத்தில் முன்பதிவு செய்து நேரம் ஒதுக்கீடு பெற வேண்டும். அதேபோல குடியரசுத் தலைவர் மாளிகையின் அருங்காட்சியக வளாகத்தையும் வாரம் ஆறு நாட்கள் பார்வையிடலாம்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com