பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த அரசு திட்டம்!

பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த அரசு திட்டம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழகத்தில் வங்கிக் கணக்கு இல்லாத 14 லட்சத்து 60 லட்சம் ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு  அடுத்த ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்கும்படி, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

ஜனவரியில் பொங்கல் பரிசு தொகையை நேரடியாக ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் 'ஆதார்' எண் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அப்படி ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்ததில் தமிழகத்தில் 14 லட்சத்து 60 லட்சம் ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு  வங்கி கணக்குகள் இல்லாத விபரத்தை அரசு கண்டறிந்துள்ளது. அவர்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கை துவக்க நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களிடம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சமீபத்தில் தெரிவித்தார்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மண்டல இணை பதிவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். அதில் வங்கி கணக்கு இல்லாத 14.60 லட்சம் கார்டுதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஜனவரியில் பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகவே வங்கி கணக்குகளை விரைந்து துவக்கும் பணியில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com