ஆணழகன் ஆசையில் உடற்பயிற்சியோடு ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்ட ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு!

ஆணழகன் ஆசையில் உடற்பயிற்சியோடு ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்ட ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

டலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறேன் பேர்வழி என்று கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள் சிலர் அவ்வப்போது மாரடைப்பு போன்ற சம்பவங்களால் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை ஆவடி அருகே ஜிம் மாஸ்டரும், ஆணழகனுமான ஆகாஷ் என்பவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீப காலமாக ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று வந்த 25 வயதான ஜிம் மாஸ்டர் ஆகாஷ் திடீரென ரத்த வாந்தி எடுத்ததால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி செய்து பரிசோதித்ததில், அவரது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து இருந்தது தெரிய வந்துள்ளது. இவர் தனது உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதிகளவு ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொண்டதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தொடர்ந்து இதுபோன்ற ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்து வருவதாகவும், இதன் காரணமாக இவரது குடல் மற்றும் கிட்டினி போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மூச்சு விடுவதற்குக் கூட சிரமப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ் நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com