

சென்னை வானிலை மையம் அறிக்கை:
மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதிகள் முதல் குமரிக்கடல் வரை விதர்பா, உள் கர்நாடகா, ராயவர்மா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிவித்துள்ளது.
இன்று (ஏப்ரல் 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை* தேனி* ஈரோடு* திருப்பூர்* திருச்சி* நாமக்கல்* சேலம்* தர்மபுரி* கிருஷ்ணகிரி
மே 1ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* ஈரோடு* கோவை* திருப்பூர்* திண்டுக்கல்* தேனி
மே 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி, * கோவை, * திருப்பூர், * திண்டுக்கல், * தேனி, * மதுரை, * விருதுநகர், * சிவகங்கை இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.