
மே அல்லது ஜூன் மாதத்திற்கு EPFO பயனாளர்கள் யூபிஐ மற்றும் ஏடிஎம் மூலமாக தங்கள் பிஎஃப் பணத்தை எடுக்கலாம் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் EPFO உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை UPI மற்றும் ATM மூலம் விரைவில் எடுக்க முடியும் என்று சுமிதா தாவ்ரா செய்தி நிறுவனமான ANI இடம் தெரிவித்துள்ளார்.
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய மற்றும் நிம்மதியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஃப் பணத்தை எடுப்பதில் ஊழியர்கள் பலரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனை போக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதாவது EPFO, மே மாத இறுதியியில் UPI மூலமும் விரைவில் பணம் எடுக்கும் செயல்முறையை தொடங்கப் போவதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்தார். ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் முறையை பற்றி விவாதித்து வந்த நிலையில், இனி யூபிஐ மூலமும் பயனர்கள் பணத்தை எடுக்கலாம்.
மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள், உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுப்பதை எதிர்பார்க்கலாம். மேலும் பயனர்கள் தங்கள் பிஎஃப் கணக்கு இருப்பை நேரடியாக யுபிஐ மூலம் சரிபார்க்கவும், ஏடிஎம் மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் வரை எடுக்கவும் முடியும்.
EPFO அதன் செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது, பணம் எடுக்கும் செயல்முறையை சீராக்க 120 க்கும் மேற்பட்ட தரவுத்தளங்களை ஒருங்கிணைத்துள்ளது. உரிமைகோரல்களைச் செயலாக்கும் நேரம் வெறும் 3 நாட்களாகக் குறைந்துள்ளது, 95% உரிமைகோரல்கள் இப்போது தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன, மேலும் செயல்முறையை மேலும் எளிதாக்கும் திட்டங்கள் உள்ளன.
ஆனால் தற்போது EPFO உறுப்பினர்கள் UPI மூலம் PF பணத்தை எடுக்க முடியாது. இந்த செயல்முறை தொடங்கப்பட்டதும் தற்போதைய 2-3 நாட்களுடன் ஒப்பிடும்போது சில மணிநேரங்கள் அல்லது நிமிடங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. UPI டிஜிட்டல் கொடுப்பனவுகளை எளிதாக்கியதைப் போலவே, இந்த வசதியும் உறுப்பினர்களுக்கு PF திரும்பப் பெறுவதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.